திருவந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் உள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் இருந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இதுகுறித்த செய்தி கடந்த வாரம் புகார் பெட்டியில் வெளியானது. இதனை தொடர்ந்து அந்த வேகத்தடை மீது வர்ணம் பூசி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.