வடலூர்- கும்பகோணம் சாலையில் கருங்குழி கிராமம் செல்லும் இடத்தில் கூட்டுரோடு அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் கூட்டுரோடு பகுதியில் மக்கள் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்களில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் அங்கு வேகத்தடை அமைப்பது அவசியம்.