விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அதனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பாலத்தின் ஓரத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் விரைந்து அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.