பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடை உயரமாக அமைக்கப்பட்டு உள்ளதால், இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உயரமான வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, உயரமாக உள்ள இந்த வேகத்தடையை அகற்றிவிட்டு சிறிய அளவிலான வேகத்தடை அமைத்து அதில் வெள்ளை வர்ண கோடுகள் பூசித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.