அரியலூர் மாவட்டம், செந்துறை காந்தி நகர் விரிவு படுத்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிறிதளவு மழை பெய்தாலும் சேறும், சகதியுமாக சாலை மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்ந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.