மதுரை மேற்கு ஒன்றியம், பரவை-கோவில் பாப்பாகுடி செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார்சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?