கும்பகோணம் தாலுகா அண்ணலக்கிரஹாரம் பகுதி மாத்தி கிராமம் அறிஞர் அண்ணா கூட்டுறவு நகரில் சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.