தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. கால்நடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.