சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, தானாவயல் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றன. எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?