கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், செம்மடை பகுதியில் மண் சாலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேறும், சகதியுமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.