வேகத்தடைக்கு வர்ணம் பூசலாமே!

Update: 2024-12-22 13:49 GMT

சேலத்தில் இருந்து வாழப்பாடி செல்லும் வழியில் அம்மாபேட்டை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்த பகுதி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த இடத்தில் உள்ள வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவில் வாகனங்களில் சென்று வருபவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசிஅரசன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்