குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-12-22 12:27 GMT

திருவாரூர் மாவட்டம் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலை பகுதியில் தென்னவராயன்நல்லூர்-ஊட்டியாணி இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்