வீரபாண்டி ஒன்றியம் அக்கரைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலம்பட்டி பகுதியில் மணல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இதனால் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்கள் சேற்றில் புதைந்து நின்று விடுகிறது. எனவே இந்த பகுதியில் விரைந்து தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சபரிசன், வீரபாண்டி.