மதுரை மாநகராட்சி 36-வது வார்டு வ.உ.சி. நகரில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் மேற்கண்ட சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.