திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ஸ்ரீதேவி நகர் கருமாரியம்மன் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள்,சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும், சிறிது மழை பெய்தாலே சாலையில் மழைநீர் தேங்கிவிடுகிறது. எனவே அந்த சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.