நட்டாலம் ஊராட்சி உட்பட்ட நேசர்புரத்தில் இருந்து பள்ளியாடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் நாகர்கோவிலில் இருந்து நேசர்புரம், புதுக்கடைக்கு செல்லும் அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையோரத்தில் உள்ள பாப்பனாட்டுக்குளத்தின் கரைப்பகுதியும், சாலை ஒரு பகுதியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் இடிந்து விழுந்து விட்டது. தற்போது கனரக வாகனங்கள் செல்வதால் குளத்தின் கரைப்பகுதி மேலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்து காணப்படும் குளத்தின் கரைப்பகுதியையும், சாலையையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயன், நேசர்புரம்.