வெள்ளிச்சந்தை பகுதியில் நிலவடிகுளம் உள்ளது. இந்த குளத்தில் தெற்கு பகுதியில் இருந்து கண்ணமங்கலம் செல்லும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. மேலும், ஓரத்தில் தென்னை மரங்கள் அங்கு உள்ளன. குளத்தின் கரையில் தடுப்பு சுவர் அமைக்கப்படாமல் இருப்பதாலும் 4 சக்கர வாகனங்கள் செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை அகலப்படுத்துவதுடன், குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயலெட்சுமி, வெள்ளிச்சதை.