மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் அகரவட்டம் ஊராட்சியில் புளியசெழிப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை இறுதி சடங்கு செய்வதற்கு எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.மழைக்காலங்களில் சுடுகாடு செல்லும் பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புளியசெழிப்பு கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.