சேறும், சகதியுமான சாலை

Update: 2024-11-17 13:11 GMT
சேறும், சகதியுமான சாலை
  • whatsapp icon

திருச்சி மாவட்டம், கேள்ளிக்குடி காந்தி காலனி வடக்கு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைபெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் இந்த சாலை வழியாக செல்லும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்