விரைந்து முடிக்க வேண்டிய சாலை பணி

Update: 2024-09-29 18:01 GMT

முத்தம்பட்டியில் மண் பாதை, சாக்கடை கால்வாய், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கிராம பஞ்சாயத்தால் 3 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இந்த வழியாக செல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். மேலும் அங்கு விளையாடும் குழந்தைகள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். . இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-உதயா பழனிசாமி, முத்தம்பட்டி.

மேலும் செய்திகள்

சாலை பழுது