தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2024-09-29 17:36 GMT

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி அந்தோணியார்தெருவில் உள்ள கல்லறைத்தோட்டம் அருகே பாதாள சாக்கடை பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்ததும் மீண்டும் அங்கு தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை சேதமடைந்த நிலையில் மண்மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே விரைவாக தார்சாலை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை பழுது