விபத்தை தடுக்க பேரிகாடு அவசியம்

Update: 2024-09-01 17:49 GMT

ராசிபுரம் டவுன் நாமக்கல் சாலையில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த சாலையின் வழியாக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன. அது மட்டுமல்லாமல் திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பஸ்கள், லாரிகள், கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலோ அல்லது மாரியம்மன் கோவில் அருகிலோ விபத்தை தடுக்க பேரிகாடு வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், ராசிபுரம்.

மேலும் செய்திகள்