வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-08-11 07:43 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு அஞ்சுகுடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் இருந்து தெங்கம்புதூருக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிகுள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜவகர், தெற்கு அஞ்சுகுடியிருப்பு

மேலும் செய்திகள்