வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-07-21 13:16 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேகம்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட  உரசூர் கிராமத்தில் தார்சாலை  சேதமடைந்து காணப்படுகிறது.  வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மேடு பள்ளம் தெரியாமல் விபத்தில்  சிக்கி காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்