மண் சாலையால் மக்கள் அவதி

Update: 2024-07-21 11:32 GMT

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டு ஏர்போர்ட்டு பகுதி மருவூர் அரசி நகரில் சாலைகள் அனைத்தும் கிராமத்து மண்சாலைகளாக காட்சியளிக்கின்றன. பாதாளசாக்கடை பணிகள் முடிந்ததும் தார் சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பாதாளசாக்கடை பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் இந்த மண்சாலைகள் வயலை உழுததுபோல் காட்சியளிக்கும். மருவூர் அரசி நகரில் ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் உள்ளது. மழை காலங்களில் மண்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடும். சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் இந்த சாலை வழியாக செல்ல மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்