நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

Update: 2024-07-21 11:13 GMT

திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர், சிவசக்தி நகர் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 7-வது அவென்யூ பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்தது. தற்போது இந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அந்த வழியாக செல்லும் முதியவர்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட இடத்தில் சாலை இல்லாமல் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் ஒரு பகுதியில் மட்டும் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்