வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2024-07-21 08:18 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தால் பகுதியில் சாலையோரத்தில் அனந்தனார் கால்வாய் செல்கிறது. இந்த பகுதியில் கால்வாயின் கரைப்பகுதி இடிந்து விழுந்துள்ளது. மேலும், அந்த பகுதியில் சாலையோரத்தில் விபத்து தடுப்பு சுவரும் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. மிகவும் குறுகிய சாலை என்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த கால்வாய் கரையை சீரமைப்பதுடன், விபத்து தடுப்பு சுவர் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக் அப்துல்காதர், திட்டுவிளை. 

மேலும் செய்திகள்