குண்டும் குழியுமான சாலை

Update: 2024-07-14 12:52 GMT

சிவகங்கை மாவட்டம்  எஸ்.புதூர் ஊராட்சி தர்மபட்டியில் இருந்து செட்டிகுறிச்சி வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.எனவே  சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்