குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-14 11:49 GMT

கூடலூரில் தொடர் மழையால் ஆங்காங்கே சாலைகள் சேதம் அடைந்து வருகின்றன. குறிப்பாக கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் வாகனங்களும் பழுதாகி வருகின்றன. எனவே பழுதான சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்