குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-07-14 10:18 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் 47-வது வார்டில் நாதர்நகர் விரிவாக்கம் பிரபஞ்சா நகர் உள்ளது. இங்குள்ள சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக கிடக்கிறது. மழைநீர் தேங்குவதால் சாலை சேறும்,சகதியுமாகிறது. இதன்காரணமாக அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அவ்வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்