சீரமைக்கப்படுமா?

Update: 2024-07-07 08:31 GMT

தெங்கம்புதூர் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்து மதத்தினருக்கான ஒரு மயானம் ஊரின் கிழக்குபுறம் ஒரு பெரிய குளத்தின் அருகில் உள்ளது. இந்த மயானத்துக்கு செல்லும் சிறிய சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இறந்தவரின் உடலை இறுதி சடங்கிற்கு எடுத்துச் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.எ.நாராயணன், மருங்கூர்.

மேலும் செய்திகள்