சாலை பணி முடிக்கப்படுமா?

Update: 2024-06-30 14:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ஈஸ்வரி நகர் பகுதியில் புதிதாக சாலை போடும் பணி நடைபெற்றது. அதற்காக ஜல்லிகள் போடப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக தார் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பயணிகள் மிகவும் அவதி அடைகின்றனர். சில சமயம் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்