சேறும்,சகதியுமான சாலை

Update: 2024-06-30 12:11 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் நம்பிவயல் கிராமம் வடக்கு தெருவில் சாலை சேறும்,சகதியுமாக உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த சாலை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேற்றினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேறும்,சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்