சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-30 11:58 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்தில் உள்ள செல்லம்பட்டி சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு,முரடாக உள்ளது. பொதுமக்கள் சிரமத்துடன் சாலையில் நடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளும் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்