குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-06-30 11:58 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் ஸ்ரீமான்நாடிமுத்துப்பிள்ளை சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்