குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-30 11:35 GMT

கரூர் மாவட்டம், புலியூர் மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில் கடவூர் ஒன்றியம் மஞ்சா நாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரத்தை அடுத்துள்ள மதுக்கரை பிரிவிலிருந்து கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் மணவாசி முடக்கு சாலை வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலையால் கடவூர் ஒன்றிய பகுதியை சேர்ந்தவர்கள், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, பாளையம், லந்தக்கோட்டை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாயனூருக்கு செல்வதற்கு கரூர் மற்றும் புலியூர் வழியாகபோக வேண்டிய நிலையை மாற்றி குறைந்த தூரத்தில் விரைவாக செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த சாலை மதுக்கரை பிரிவிலிருந்து தேவாச்சிகவுண்டன் புதூர் வரை பழுதடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்தச் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்