நடவடிக்கை தேவை

Update: 2024-06-30 07:13 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னக்குறிச்சி கீழவூரில் இருந்து ஈசன்தங்கு செல்லும் சாலை (பொட்டல் குளம் எதிர்ப்புறம்) உள்ளது. இந்த சாலையில் ஒரு புறம் 20 அடி பள்ளமும், புதர்களாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த சாலையோரத்தில் பக்கச்சுவர் அமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விவேக் சத்ரபதி, கன்னக்குறிச்சி கீழவூர்.

மேலும் செய்திகள்