கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2024-06-23 12:05 GMT

கரூர் மாவட்டம், கிழக்கு ஆண்டாங்கோவில் சோமசுந்தரம் நகர் பகுதியில் சாலை குண்டு, குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்