தொடங்கப்படாத சாலை பணி

Update: 2024-06-23 11:59 GMT

கரூர் மாவட்டம், தான்தோன்றி ஒன்றியம், ஆண்டான் கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட அர்ச்சனா நகர் முதல் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான தார் சாலை வசதி இல்லாததால் இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிலையில் பூமி பூஜை போடப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் மழை பெய்யும்போது இப்பகுதியில் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்