சாலையில் சுற்றித்திரியும் நாய்கள்

Update: 2024-06-23 11:52 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பழைய பஸ் நிலையம்,அந்தோணியார் கோவில் தெரு, பெரிய கோவில் தெரு, பழைய வீட்டு வசதி வாரியம், இந்திராநகர் ஆகிய இடங்களில் நாய்கள் அதிகளவில் இருக்கின்றன. இவை சாலையில் கூட்டமாக அங்கும்,இங்கும் சுற்றித்திரிகின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.. 

மேலும் செய்திகள்