பாலம்-சாலையை சீரமைக்க கோரிக்கை

Update: 2024-06-23 11:36 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள காலனி தெருவில் மயானத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் அச்சாலையில் உள்ள கப்பி கற்களும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் இவ்வழியில் உள்ள பாலமும் உடைந்து காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களை இந்த வழியாக தூக்கிச்செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்