சாலையில் பள்ளம்

Update: 2024-06-23 11:36 GMT

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட 45-வார்டு முல்லை நகர் நுழைவாயிலில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைபெய்யும்போது இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்