சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-16 17:17 GMT

வேடசந்தூர் அருகே குருவனூரில் இருந்து சீலநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்