ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா

Update: 2024-06-16 16:50 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர், திருப்பத்தூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தர்மபுரி, சேலம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. விபத்துகளும் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே தனியார் பஸ்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்