கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-06-16 12:26 GMT

கரூர் மாவட்டம் கிழக்கு ஆண்டாங்கோவில் ஊராட்சி தீரன் சின்னமலை 7-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை மண் சாலையாக மாறியதுடன், குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தநிலையில் புதிய தார் சாலை அமைத்துதரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய தார் சாலை அமைக்க ஜல்லி கற்கள் போடப்பட்ட நிலையில் சாலை அமைக்கும் பணி நிறைவேற்றப்படாமல் பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்