குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2024-06-16 11:32 GMT

அரியலூர் அழகப்பா நகர் முதல் குறுக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையானது தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதினால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்