தடுப்புச்சுவர் வேண்டும்

Update: 2024-06-09 16:44 GMT

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே கருமலை பகுதியில் நங்காஞ்சியாறு அணைக்கு செல்லும் சாலையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒருபுறத்தில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களுக்கு அந்த பள்ளம் இருப்பது தெரியாது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்