போக்குவரத்து நெரிசல்

Update: 2024-06-09 16:10 GMT

கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி, ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் உயர்மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் சாலை ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலைகளில் செல்ல வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. நாள்தோறும் இந்த சாலைகளில் விபத்துக்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சாலையை கடக்க மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே மேம்பால பணிகள் நடந்து வரும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்