குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-09 11:44 GMT

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி ஈரோடு -கரூர் சாலையில் இருந்து மதுரை வீரன் நகர் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்