வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2024-06-02 17:04 GMT

தர்மபுரி- சேலம் சாலையில் இலக்கியம்பட்டி பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த பகுதியில் இரவு நேரத்தில் வரும் பல வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகத்தை குறைக்காமல் வருகின்றன. இதனால் விபத்துக்கள் நடக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடையில் இரவு நேரத்தில் நன்றாக தெரியும் வகையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும். இல்லையெனில் ஒளிரும் பட்டைகள் பொருத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும்.

-மனோஜ், தர்மபுரி.

மேலும் செய்திகள்